Thursday 26 October 2017

அம்மா!

Happy Mothers Day!

அம்மா, பாசம் இல்லா இவ்வுலகில்
பாசத்தை ஊட்டியும்
நேசம் இல்லா இவ்வுலகில்
நேசத்தை காட்டியும் வளர்த்தாய்..
இரவிலும் பகலிலும்
எனக்கெனத் துடித்தாய்..
கனவிலும் நான் அழுதால்
திடுக்கிட்டு விழித்தாய்..
தூக்கம் வராது நான் தவித்தபோது,
உச்சி முகர்ந்து  உறங்கச் செய்தாய்
எந்த தவமும் நான் செய்யவில்லை
உன்னைப் பெறுவதற்க்கு..
நீயோ தவம் செய்தேன் என்றாய்
என்னைப் பெறுவதற்க்கு..
உனக்காக கண் விழிக்க,
உன்னைத்தான் தாங்கிக்கொள்ள
நான் நினைக்கும் நேரம்..
என் புரிதலின் வேளை... காலம் கடந்து விட்டது..
கடவுளுக்குத்தான் உன் மேல் எத்தனை ஆசை?
என்னை விட்டு பிரித்து விட்டான் சீக்கிரமே..
மீண்டும் ஒரு முறை வேண்டும்
அம்மா, உந்தன் கருவறை!

No comments:

Post a Comment

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...