Thursday 26 October 2017

முதற் காதல்

அறியா பருவத்தில் அவனைக் கண்டேன்
கண்டதும் காதலுற்றேன்;
என்னுள்ளில் ஏதேதோ மாற்றங்கள் அவனால்
அவன் வரும் வழிமேல் விழி வைத்து
வண்டிச் சத்தம் கேட்டுக் காத்திருந்து
கிடப்பதன் சுகமே தனி
காதல் ஒரு சுகமான வலி..
காதலுற்ற போது அதன்
சுகம் ஒரு வலி என்றால்
உன்னை விட்டு பிரிந்தபோது,
சோகம் வேறு வித வலி எனக்கு
பிரிந்த பின்பும் உன்னுடைய
நினைவுகளை அழியவில்லை..
காலங்கள் கடந்தன..
வாழ்க்கை சக்கரம் சுற்றின..
இன்றும் கூட்டத்தில் உன்னைத்
தேடுகின்றன என் கண்கள்..
ஆனால் உன்னை கண்டால் மறுபடி
காதல் துளிர்க்குமா,
வார்த்தைகள் வெளிவரத் தடுமாறுமா?
நீ மறந்திருப்பாயோ என்னை??

No comments:

Post a Comment

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...