Thursday 26 October 2017

அழகியே!

உன்னைப் பார்த்தேன், காதல் துளிர்த்தது
உன்னை நினைத்தேன், பாலும் கசந்தது
உன்னோடு இருந்த நாட்கள் எல்லாம்
பசியில்லை, தூக்கம் இல்லை
ஆயின் நினைவுகள் பசுமரத்து ஆணிதானடி..
பதிந்தது என் நெஞ்சில்..
உலகம் அழகு, ஏனெனில் நீ அழகு..
நினைவுகள் அழகு, உன்னால் தானடி..
என்னை விட்டுப் பிரிந்து சென்றாய்
நெஞ்சம் வலித்தது அறிவாயோ??
இன்றும் நாம் சந்தித்த இடங்கள் எல்லாம்
அழகு தான், ஏனெனில் உன் கண் வழியே
நான் பார்த்த இடங்கள் அவை..
எனக்குள்ளே சிரிக்கிறேன்..
காதலையே காதலிக்க செய்த பெண்ணே..
அழகை ரசிக்கச் சொல்லிக் கொடுத்த அழகியே..
உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்..

No comments:

Post a Comment

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...